அதிகச் சம்பளம் கேட்ட ரஜினி – அதிர்ச்சியில் தயாரிப்பு நிறுவனம்
பேட்ட படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ரஜினி.
அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. அந்தப்படத்துக்கும் அனிருத் இசையமைக்கவிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே லைகா தயாரிப்பில் 2.ஓ படத்தில் ரஜினி நடித்திருந்தார். அந்தப்படத்தில் நடித்ததற்காக ரஜினிக்கு ஐம்பது கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அதனால் இந்தப்படத்துக்கும் அவருடைய சம்பளம் அதுதான் என்று தயாரிப்பு நிறுவனம் கணக்குப் போட்டுக்கொண்டிருந்ததாம்.
ஆனால் ரஜினியோ இந்தப்படத்தில் நடிக்க எனக்கு அறுபது கோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.
இதைச் சற்றும் எதிர்பாராத தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
அது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.