சினிமா செய்திகள்

ரஜினிக்கு எதிராகச் செயல்பட்டவர்கள் – நடிகை அறிவிப்பால் சர்ச்சை

சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் சனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்தள்ளது.

இந்தப்படத்துக்கு ஆந்திராவிலும் தெலுங்கானாவிலும் போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.

பாலகிருஷ்ணா நடித்து என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள என்.டி.ஆர், சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்துள்ள விதேய ராமா ஆகிய 2 தெலுங்கு படங்களும் பேட்ட படத்துடன் திரைக்கு வந்துள்ளன.

அந்த 2 படங்களுக்கும் ஆந்திரா, தெலுங்கானாவில் 90 சதவீதம் திரையரங்குகளை ஒதுக்கி விட்டனர்.இதனால் பேட்ட படத்துக்குக் குறைவான திரையரங்குகளே கிடைத்துள்ளன.

இதனைக் கண்டித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

ஆந்திராவில் பேட்ட படம் அதிக தியேட்டர்களில் வெளியாவதை தெலுங்கு பட உலக மாபியாக்கள் சுரேஷ் பாபு, அல்லு அரவிந்த், சுனில் நரங்க், தில் ராஜூ ஆகியோர் தடுத்துள்ளனர். அவர்களை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது.

இந்த நபர்கள் சுயநலத்தோடு செயல்படுகிறார்கள். இவர்களால் பல சிறிய படங்களின் தயாரிப்பாளர்கள் தற்கொலை செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆந்திராவில் பேட்ட படத்தை வெளியிடும் வினியோகஸ்தர் நிலைமையை நினைத்தால் கவலையாக உள்ளது

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ரஜினிக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று சிலர் பெயரை வெளிப்படையாக ஸ்ரீரெட்டி சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts