ஒற்றை வரி ட்வீட்டில் இணையத்தைத் தெறிக்க விட்ட ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியாவுக்கு சமூக வலை தளங்களில் பெரும் செல்வாக்கு வந்திருக்கிறது.
அதை மீண்டும் உறுதிப் படுத்தும் விதமாக இன்றைய நாள் அமைந்துள்ளது.
ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்குப் பிறகு 21 நாட்கள் கழித்து, வணக்கம் நண்பர்களே, எல்லோரும் நலம் என நம்புகிறேன் என்கிற ஒற்றை வரி ட்வீட் போட்டிருக்கிறார் ஓவியா.
அதற்கு, தலைவி வந்துட்டீங்களா? என்று தொடங்கி 1500 க்கும் மேற்பட்ட பின்னூட்டங்கள், ஆயிரக்கணக்கில் ரீட்வீட், பல்லாயிரம் விருப்பக் குறிகள் என்று தெறிக்க விடுகிறார்கள் ஓவியா ரசிகர்கள்.
மூன்றுமணி நேரத்தில் இந்த எண்ணிக்கை. இன்னும் அது தொடர்கிறது.
இவ்வளவு ஆதரவும் அவர் நடிக்கும் படத்துக்குக் கிடைத்தால் அப்படம் நிச்சயவெற்றிப் படமாக இருக்கும்.
பார்க்கலாம் என்ன நடக்கிறதென்று…