செல்வராகவன் தனுஷ் இணையும் படம் – இன்று தொடக்கம்
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள படம் நானே வருவேன்.இந்தப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக யாமினி யக்னமூர்த்தியும் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜாவும் பணிபுரிகின்றனர். இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக விஜய் முருகன்,படத்தொகுப்பாளராக புவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பணிபுரிகின்றனர்.
2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு இப்படத்தின் தலைப்பு வடிவமைப்பு ஆகியனவற்றை சனவரி 13 இரவு 7:10 மணிக்கு ‘நானே வருவேன்’ என்ற தலைப்புடன் அடங்கிய முதல்பார்வையை வெளியிட்டது படக்குழு.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20,2021 இல் தொடங்கும் என்று இன்று (ஜூன் 23,2021) மாலை 4 மணிக்கு அறிவித்தனர்.
ஆனால், சொன்னபடி படப்பிடிப்பு தொடங்கவில்லை.
கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் மற்றும் மித்ரன் ஜவகர் இயக்கும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களை முழுமையாக முடித்துவிட்டு செல்வராகவன் படத்துக்குத் தேதிகள் கொடுத்திருக்கிறார் தனுஷ்.
அதன்படி அந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று (அக்டோபர் 16,2021) தொடங்கியது. இத்தகவலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.