சினிமா செய்திகள்

பாதியில் முடிந்த படப்பிடிப்பு – கார்த்தி வருத்தம்

கொம்பன்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் முத்தையாவும் கார்த்தியும் இணையும் படம் விருமன்.இப்படத்தில் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இப்படத்தில்ம் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றார்கள். இப்படமும் கிராமத்துப் பின்னணியில், உறவுகளின் கதையை சொல்லும் குடும்ப திரைப்படமாக உருவாகவுள்ளது.

இப்படம் மூலம், இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இணைகிறார். ‘மாநகரம்’ மற்றும் பல வெற்றிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த எஸ்.கே.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு சண்டைக் காட்சிகளை அமைக்கின்றார்.

சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கவிழா செப்டம்பர் 6 ஆம் தேதி நடந்தது.

செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தேனியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

பெரும்பகுதிப் படப்பிடிப்பை முடித்துவிட்டுத் திருமபுவது எனத் திட்டமிட்டுத்தான் படப்பிடிப்புக்குச் சென்றார்கள்.

ஆனால், படப்பிடிப்பு தொடங்கிய ஒரு வாரத்துக்குள் பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டனவாம். இதனால் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாத நிலையில், படப்பிடிப்பை இரத்து செய்துவிட்டுத் திரும்பிவிட்டார்களாம்.

இதனால் கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கடும் வருத்தத்தில் உள்ளனராம்.

இதுகுறித்து படக்குழு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டால், படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் பிரகாஷ்ராஜின் தேதிகள் கிடைக்காததால் படப்பிடிப்பு நடத்த இயலவில்லை. அவருடைய தேதிகள் உறுதியானதும் படப்பிடிப்பு தொடங்கும் என்று சொல்கிறார்கள்.

Related Posts