சினிமா செய்திகள்

நாடோடிகள் 2 படத்தில் காலா பட கலைஞர்கள்

சமுத்திரக்கனி இயக்கத்தில் நாடோடிகள் 2 உருவாகி வருகிறது. இதில் சசிகுமார், அஞ்சலி கதாநாயகன்,கதாநாயகியாக நடிக்கிறார்கள்.

இவர்களோடு பரணி,அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன்,ஞானசம்பந்தம்,துளசி,ஸ்ரீரஞ்சனி,சூப்பர் சுப்பராயன், ராம்தாஸ்,கோவிந்த மூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டுக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

இந்தப்படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் முயற்சியில், காஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைநிகழ்ச்சி நடந்ததல்லவா? அதில் பங்கேற்ற சில இசைக்கலைஞர்களை இந்தப்படத்தில் பயன்படுத்தியிருக்கிறார்களாம்.

வழக்கமாக இசையமைப்பாளர் மெட்டமைத்து பாடலாசிரியர் அதற்குப் பாடல் எழுதும் முறையிலிருந்து மாறுபட்டு, அந்தக் கலைஞர்களே எழுதி அவர்களே பாடியுமிருக்கிறார்களாம்.

இதனால் படத்துக்கு புதிய வண்ணம் கிடைக்கும் என்று எண்ணி இதைச் செய்திருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

காலா படத்தில் சமுத்திரக்கனி நடித்தபோது அதில் பங்கேற்ற இந்த இசைக்கலைஞர்களோடு ஏற்பட்ட பழக்கம், இந்தப்படத்திலும் அவர்களைப் பயன்படுத்த வைத்திருக்கிறது.

காலாவில் அந்த இசைக்கலைஞர்களுக்கு வரவேற்பும் விமர்சனமும் கல்ந்தே கிடைத்தன. இந்தப்படத்தில் என்ன நடக்கிறதெனப் பார்க்கலாம்.

Related Posts