மீண்டும் முந்தானைமுடிச்சு – பாக்யராஜுடன் இணைகிறார் சசிகுமார்
1983 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் முந்தானை முடிச்சு. பாக்யராஜ் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். ஊர்வசி கதாநாயகியாக அறிமுகமானார். அப்படத்தின் வசனங்களும் பாடல்களும் மிகவும் பிரபலமடைந்தன.
முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு அப்படம் மீண்டும் உருவாகவிருக்கிறது.
பாக்யராஜ் திரைக்கதை வசனம் எழுதுகிறார்.புது இயக்குநர் பாலாஜி இயக்குகிறார். ஆனால் இம்முறை கதாநாயகனாக நடிக்கவிருப்பவர் சசிகுமார். அவருக்கேற்பவும் தற்காலத்துக்கேற்பவும் திரைக்கதையில் சில மாற்றங்களைச் செய்திருக்கிறாராம் பாக்யராஜ்.
இப்படத்தை அசுரகுரு படத்தைத் தயாரித்த ஜே எஸ் பி. சதீஷ் தயாரிக்கவிருக்கிறார்.
வெவ்வேறு பிம்பங்களைக் கொண்ட பாக்யராஜ் சசிகுமார் கூட்டணி எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.