சினிமா செய்திகள்

வேலைநிறுத்தத்துக்குப் பிறகு முதலில் வெளியாகும் படம் இதுதான்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் மெர்க்குரி. வசனங்களே இல்லாத இப்படம், ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழகம் தவிர உலகின் பல பகுதிகளில் வெளியானது.

திரையுலக வேலைநிறுத்தம் காரணமாக தமிழகத்தில் மட்டும் அப்படம் வெளியாகவில்லை.

ஆனாலும் திருட்டு விசிடியால் தமிழ்நாட்டுக்கும் படம் வந்துவிட்டது.

திரையுலக வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக இன்று மாலை அறிவிக்கவிருக்கிறார்கள்.

அதோடு உடனடியாக வெளியாகவிருக்கும் படங்களையும் அறிவிக்கப்போகிறார்களாம்.

இதில் மெர்க்குரி படத்துக்கு முன்னுரிமை கொடுத்திருக்கிறார்களாம். வேலை நிறுத்தத்துக்குப் பிறகான வரிசையில் மெர்க்குரி பின்னால் இருந்தாலும், திருட்டு விசிடி சிக்கலால் பாதிக்கப்பட்டதால் அப்படத்துக்கு முன்னுரிமையாம்.

இதனால் வருகிற வெள்ளிக்கிழமை அப்படம் வெளியாகவிருக்கிறதாம்.

Related Posts