பட்டாம்பூச்சி என்கிற பெயரைப் பார்த்ததும் சுந்தர்.சியின் நகைச்சுவை கலந்து ஓர் அழகான காதல் கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்தால் ஏமாந்து போவீர்கள். அப்பாவால் ஒதுக்கப்பட்ட ஓர் இளைஞனின் மனப்பிறழ்வால் அதிரவைக்கும் இரத்தத் தெறிப்புகளுடன் தொடக்கம் முதல் இறுதிவரை படபடப்புடனே வைத்திருக்கிறார்கள்.
விமர்சனம்
ஊட்டியில் ஒரு சைக்கோ கொலைகாரனால் தொடர்கொலைகள் நடக்கின்றன. அவற்றில் நாயகன் அசோக்செல்வன் கண்முன்னேயே நாயகி ஐஸ்வர்யாமேனன் கொலை செய்யப்படுகிறார். அதனால் குற்றவுணர்ச்சியில் தவிக்கும் நாயகன் அசோக்செல்வனுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அக்கொலையைச் செய்தது யார்? என்கிற துப்பு கிடைக்கிறது. அதன்பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதைச் சொல்வதுதான் படம். ஐஸ்வர்யாமேனனின் காதலராக
தேனி மாவட்டம் பண்ணைப்புரம் கிராமத்தில் (இளையராஜா பிறந்த ஊர்) முதன்முதலாக ஆட்டோ வாங்கி ஓட்டுகிறார் விஜய்சேதுபதி. நல்லொழுக்கம் மிகுந்த அவர் தனியர்.அவருக்கு ஓர் உற்ற நண்பர். படத்தில் இஸ்லாமியாராக வரும் குரு.சோமசுந்தரம். தனியராக இருந்தாலும் எவ்வித கெட்டபழக்கங்களும் இல்லாமல் சொந்தமாக ஒரு வீடு கட்டி வைத்துக் கொண்டு திருமணத்துக்குப் பெண் தேடுகிறார். அவருடைய நற்பண்புகள் மூலம்
ஒரு பழங்காலக் கோயிலுக்குள் பெரும் புதையல் இருக்கிறது. அதைக் கைப்பற்ற சர்வதேசக் கொள்ளைக்கும்பல் திட்டமிடுகிறது. அதற்காக அரசாங்கத்தின் தொல்பொருள்துறையிலிருக்கும் அதிகாரிகளையே கைக்குள் போட்டுக் கொண்டு அதைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறார்கள். அவர்கள் திட்டம் பலித்ததா? இல்லையா? என்பதை விறுவிறுப்புடன் சொல்லியிருக்கும் படம்தான் மாயோன். தொல்பொருள் துறையில் பணியாற்றும்
இயல்பாக மூச்சுவிடுவதில் சிரமம் உள்ள எந்நேரமும் ஆக்சிசன் உருளை உதவியுடன் இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மகனின் கஷ்டத்தைப் போக்க மருத்துவசிகிச்சைக்காகக் கேரளா செல்கிறார் நயன்தாரா. ஒரு கடுமையான மழை நாளில் நடக்கும் பேருந்துப் பயணம். அப்பேருந்துக்குல், பல்லாண்டுகளாகச் சிறையில் இருந்து தன் அம்மாவின் முகத்தைப் பார்க்க வேண்டும் என்கிற ஆசையுடன் பயணிக்கும் நடுத்தரவயதுக்காரர்.
சிறுமிகள் மீது கொடூரமாகப் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவோர் பற்றி ஏற்கெனவே பல கதைகள் வந்திருந்தாலும் அதை மையமாக வைத்து மாறுபட்ட வகையில் சொல்லப்பட்டிருக்கும் கதையைக் கொண்டதுதான் சுழல் இணையத் தொடர். பார்த்திபன் ஒரு தொழிற்சங்கத்தலைவர். அவருடைய மகள்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் கோபிகா ரமேஷ். திடீரென ஒருநாள் பார்த்திபனின் இளையமகள் காணாமல் போகிறார். அவர் எங்கு போனார்? என்னவானார்?
இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2. தலைப்பில் வரும் அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய
2018 ஆம் ஆண்டு இந்தியில் வெளியாகி வெற்றியடைந்த படம் ‘பதாய் ஹோ’.காலம் கடந்த வயதில் கர்ப்பமாகும் பெண்ணை அவரது பிள்ளைகளும் இச்சமூகமும் எப்படி பார்க்கிறது? அந்தத் தாயும், அவரது கணவரும் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன? என்பதுதான் அந்தப் படத்தின் கதை. அதன் தமிழாக்கம்தான் ‘வீட்ல விசேஷம்’. தொடர்வண்டித்துறையில் டிடிஆராக இருக்கும் சத்யராஜ் – ஊர்வசி தம்பதியினருக்கு திருமண
இந்த உலகம் மாந்தர்களுக்கானது மட்டுமன்று உயிர்களுக்கானது என்கிற உலகப்புகழ்பெற்ற சுற்றுச்சூழல் சொல்லாடல் உண்டு. அந்தச் சொற்களுக்கு உயிர்கொடுக்கும் படமாக அமைந்திருக்கிறது 777 சார்லி. படத்தில் 777 சார்லி என்கிற பெயரில் நடித்திருக்கும் நாய், பார்ப்போர் உள்ளங்களைக் கொள்ளை கொள்வது உறுதி. நவரசங்களையும் அந்நாய் வெளிப்படுத்தியிருக்கிறது என்றால் நம்புவது சிரமமாக இருக்கும்,
இரண்டு இலட்சம் கோடி மதிப்பிலான போதைப்பொருளை ஒரு காவல்துறை அதிகாரி அதிரடியாகப் பறிமுதல் செய்து தனது துறைக்கே தெரியாமல் மறைத்து வைக்கிறார். அதனால் அவரை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கொலை செய்கிறார்கள். அக்கொலையில் சம்பந்தப்பட்ட வில்லன்கள் மர்ம முகமூடி மனிதர்களால் கொலை செய்யப்படுகிறார்கள். அக்கொலைகளைச் செய்வது யார்? என்று கண்டுபிடிப்பதுதான் படம். கமலைச் சுற்றியே திரைக்கதை