சினிமா செய்திகள்

பிகிலா? கைதியா? – திருச்சியில் வெடித்த சர்ச்சை

2019 தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் மற்றும் கார்த்தி நடித்த கைதி ஆகிய இரண்டு படங்கள் வெளியாகவிருக்கின்றன.

இவ்விரண்டில் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளின் தேர்வாக பிகில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப்பட்டு வருகிறது.

இப்படிப்பட்ட சூழலில் திருச்சியின் முதன்மையான திரையரங்குகளில் ஒன்றான ரம்பா திரையரங்கில் பிகில் படத்தைத் திரையிட மறுத்து கைதி படத்தைத் திரையிடவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியானது.

இது பிகில் படத்துக்கும் விஜய் ரசிகர்களுக்கும் பின்னடைவு என்று விமர்சனமும் செய்யப்பட்டது.

இச்செய்தி காட்டுத்தீ போல பரவியது. உடனே ரம்பா திரையரங்கினர், தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில், பிகில் திரையிடமாட்டோம் என்பதில் உண்மையில்லை, இரு திரைப்பட நிறுவனங்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறோம். இது குறித்து விரைவில் அறிவிக்கிறோம் என்று சொல்லி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி  வைத்திருக்கிறார்கள்.

Related Posts